கும்பகோணம், ஜன.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் செம்மங்குடி முன்னாள் கிளைச் செயலாளர் தோழர் பி.விஸ்வநாதன் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் செம்மங்குடி கடை வீதியில் நடைபெற்றது. கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், தோழர் விஸ்வ நாதன் உருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார். ஒன்றியச் செயலா ளர் எஸ்.பழனிவேல், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் எஸ்.தருமையன், கே.ரெங்கசாமி, ஏ. வெங்கடேசன், வி.ச. ஒன்றியச் செயலாளர் ஜி.முருகன், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.