கும்பகோணம், ஜூலை 16 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தனியார் பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று நடந்த தீ விபத்தில், 94 குழந்தைகள் வெந்து மடிந்தன.
இந்நினைவு தினத்தையொட்டி ‘கும்பகோணம் குழந்தைகள் நினை விடத்தில்’ இந்திய மாணவர் சங்கம் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட் டது. இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் அரவிந்தசாமி, மாவட்டத் தலைவர் அர்ஜுனன், மாவட்டச் செய லாளர் சந்துரு, மாவட்ட துணைச் செயலாளர் மணிகண்டன், துணைத் தலைவர் பிரதீப், செயற்குழு உறுப்பி னர்கள் அன்புமணி, ஹரிஷ், தமிழரசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சங்கத்தின் மாநிலத் தலை வர் அரவிந்த்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “2004 ஜூலை 16 அன்று கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் அரசின் அலட்சியத்தால் 94 குழந்தை கள் தீக்கிரையாகினர். ஆனாலும் இன்று வரை அந்த நிலை மாறாமல், பல்வேறு கல்வி நிலையங்களின் கட்டிடங்கள் மற்றும் அரசு விடுதிகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இவை மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கிறது. கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்று மீண்டும் ஒரு விபத்து நடக்காமல் இருக்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் தினத்தை, குழந்தை கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு அங்கீகாரம் இல்லா மல் இயங்கும் பல்வேறு பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக கும்பகோணம் பாலக் கரை அருகில் உள்ள குழந்தைகள் நினைவு பூங்காவில் இருந்து, மாண வர்கள் பேரணியாக வந்தனர்.