districts

img

9 பேர் பாஜகவில் இருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆக.9 அன்று இணைந்தனர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அய்யனார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் பாஜகவில் இருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆக.9 அன்று இணைந்தனர். அவர்களுக்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன், சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  என்.செல்லதுரை, ஏ.கே.ராஜேந்திரன், அ.கலையரசி, ஆர்.கோகுலகிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எம்.சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.