தஞ்சாவூர்/மயிலாடுதுறை/பெரம்பலூர், மார்ச் 31- மக்களவைத் தேர்தலையொட்டி, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் சனிக்கிழமை மாலை வெளியிடப் பட்டது. அதன்படி, தஞ்சை மக்களவைத் தொகுதியில் 12 வேட்பாளர்களும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி யில் 23 வேட்பாளர்களும், மயிலாடு துறை மக்களவைத் தொகுதியில் 17 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி யில், மார்ச் 25 முதல் 27 வரை 31 பேர் 36 வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். இதையடுத்து மார்ச் 28 அன்று வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீ லனை நடைபெற்றது. அப்போது 23 பே ரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டன. மீதமுள்ள 13 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாளாக சனிக்கிழமை அறிவிக்கப் பட்டயதை அடுத்து, சங்கர் என்ற சுயேட்சை வேட்பாளர் போட்டியி லிருந்து விலகி தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து 12 பேர் களத்தில் உள்ளனர். பெரம்பலூர் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சி ஐஜேகே, நாம் தமிழர் கட்சி உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட 46 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக் கள் மீதான பரிசீலனையின் போது, 23 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன; 23 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்ப பெறு வதற்கான இறுதி நாளன்று (மார்ச் 30) ஒருவர்கூட வேட்பு மனுக்களை திரும்ப பெறவில்லை. இதனால் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 23 பேர் போட்டியிடுகின்றனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.பி.மகாபாரதி சனிக்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்துப் பேசி னார். அப்போது அவர் தெரிவிக்கை யில், “2024 மக்களவைத் தேர்தலை யொட்டி, வேட்பு மனுதாக்கல் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது, 17 வேட்பு மனுக் கள் ஏற்கப்பட்டன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தபால் வாக்குகள் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு 12D தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டு, தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 7749 வாக்காளர்களுக்கும், 10478 மாற்றுத்திறனுடைய வாக்கா ளர்களுக்கும் 12D தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் வாக்காளர்கள் தவறாது வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என்றார். இதில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்படி அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் களுக்கு, அந்த கட்சிக்கான பதிவு செய்யப்பட்ட சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சுயேட்சை வேட்பா ளர்களுக்கு அவர்கள் விரும்பிய சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்வுக்கு வராத சுயேட்சை வேட்பா ளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
நாகப்பட்டினம் தொகுதியில் 9 வேட்பாளர்கள் போட்டி
நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வேட்பாளர் வை.செல்வராஜ் உள்பட 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி), வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி (தனி), திருவாரூர் மற்றும் நன்னிலம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் 91,056 ஆண் வாக்காளர்களும், 96,841 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலினத்தவர்களும், கீழ்வேளூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 85,098 ஆண் வாக்காளர்களும், 87,975 பெண் வாக்காளர்களும் 3 மூன்றாம் பாலினத்தவர்களும், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 93,777 ஆண் வாக்காளர்களும், 96,500 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 5.51,272 வாக்காளர்கள் உள்ளனர். நாகப்பட்டினம் தொகுதியில் 223 வாக்குச் சாவடிகளும், கீழ்வேளூர் (தனி) தொகுதியில் 203 வாக்குச்சாவடிகளும், வேதாரண்யம் தொகுதியில் 227 வாக்குச் சாவடிகளும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 275 வாக்குச் சாவடிகளும், திருவாரூர் தொகுதியில் 308 வாக்குச் சாவடிகளும், நன்னிலம் தொகுதியில் 315 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 1551 வாக்குச்சாவடிகள் உள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 49 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வாக்குச் சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை. ஊடக கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான புகார்களை 1800 425 7034 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04365 252594, 252595, 252599 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் 26 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, 10 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன; 16 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒரு வேட்பு மனு திரும்ப பெறப்பட்டது. இறுதியாக, இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வை.செல்வராஜ் உள்பட 6 அரசியல் கட்சி வேட்பாளர்களும், 3 சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்படி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.