districts

img

திருபுவனம் பேரூராட்சி 8 ஆவது வார்டில் மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் சிபிஎம் வேட்பாளர் சுப்பிரமணியன் வாக்குறுதி

கும்பகோணம், பிப்.12 - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூ ராட்சி 8 ஆவது வார்டு பேரூராட்சி உறுப்பினர் பொறுப்பிற்கு மதச்சார் பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்ட ணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுப்ரமணியன் போட்டியிடுகிறார்.  அவர் திருபுவனம் பேரூராட்சி 8  ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதி களில் மக்களை சந்தித்து அரிவாள்,  சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   அப்போது சிபிஎம் வேட்பாளர் சுப்பிரமணியன் கூறுகையில், “நான்  திருபுவனம் பேரூராட்சி 8 ஆவது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றால், இந்த வார்டுக்குட்பட்ட கன்னி தோப்பு, ஒன்றாம் தெரு,. ஐந்தாம் தெரு ஆகிய பகுதிகளில் நிரந்தர சாலை வசதி, தேக்கம் அடைந்த கழிவுநீரால் தொற்று பர வாமல் இருப்பதற்கு சாக்கடைகள் சீரமைக்கப்படும். மழை நேரங்க ளில் தண்ணீர் தேங்காமல் இருப்ப தற்கு வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். 8 ஆவது வார்டு பகுதியில் குடியிருப்பவர் களின் வீட்டின் குடிமனைக்கு உரிமை ரசீதை சம்பந்தப்பட்ட துறை யிடம் பெற்றுத் தரவும், மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர்,  சாலை வசதி, சுகாதாரம் ஆகிய வற்றில் அதிக கவனம் செலுத்தி அரசு திட்டங்கள் அனைத்தையும் பெற்று தருவேன் என உறுதியளித் தார். வாக்குச் சேகரிப்பின் போது கட்சியின் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்ட  குழு உறுப்பினர் ஜீவபாரதி, பக்கிரி சாமி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க பொறுப் பாளர்கள் சேகர், சங்கர் சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;