அரியலூர், ஆக.3-
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத் திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ரூ. 6.91 கோடி மதிப்பீட்டில் 25 வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடக்கி வைத்தார்.
திருமானூர் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட் டத்தின் கீழ் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்த அவர், மையத் துக்கு வருகை தந்த குழந் தைகளுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களை வர வேற்றார்.
இதேபோல், கீழையூர் அரசுப் பள்ளியில் , சட்டப் பேரவை தொகுதி மேம்பாட் டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட் சம் மதிப்பீட்டில் கட்டப்பட் டுள்ள அரங்க மேடையைத் திறந்து வைத்து, மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், எழுது பொருள்களை அவர் வழங்கினார்.
தொடர்ந்து, பார்ப னஞ்சேரி, கீழப்பழுவூர் , அயன்சுத்தமல்லி, திருமழ பாடி, சன்னாவூர், பளிங்கா நத்தம், புதுக்கோட்டை, கண்டிராதீர்த்தம் உள்ளிட்ட கிராமங்களில் ரூ.6.91 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்து, புதிய திட்டப் பணி களுக்கு அடிக்கல் நாட்டி னார்.
நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப் பினர் கு. சின்னப்பா, முன் னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரபா கர், திருமானூர் ஒன்றியக் குழுத்தலைவர் சுமதி அசோக சக்கரவர்த்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலு வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.