தூத்துக்குடி, ஏப்.20- தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 66.88 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித் துள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமி பதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி நாடாளு மன்ற தொகுதிக்கு 19.04.2024 அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 16 24 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடை பெற்றது. தூத்துக்குடி தொகுதியில் வாக்குப் பதிவு மிகவும் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் நடைபெற்றது. இத்தொகுதியில் 4,72,056 ஆண் வாக்காளர்களும் 5,03,325 பெண் வாக்காளர்களும் மற்றும் 87 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 9,75,468 (66.88 சதவீதம்) வாக்காளர்கள் தங்களது வாக்கு களை பதிவு செய்துள்ளனர். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 72.63 சதவீதமும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 63.11 சதவீதமும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 67.37 சதவீதமும் ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 67.92 சதவீதமும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி யில் 67.72 சதவீதம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 64.13 சதவீத வாக்கு பதிவும் நடைபெற்றுள்ளது வாக்குப் பதிவு மிகவும் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடைபெற அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து பத்திரிகையாளர் களுக்கும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி நன்றி தெரி வித்துள்ளார்.