districts

img

மண்டையூர் ஜல்லிக்கட்டில் 600 காளைகள் பங்கேற்பு: 29 பேர் காயம்

புதுக்கோட்டை, ஜன.19 - கீரனூர் அருகே மண்டையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 600 காளைகள் பங்கேற் றன. 29 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மண்டை யூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக் கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ,திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளை கள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்ட 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற னர். போட்டியில் வெற்றி பெற்ற காளை களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் வெள்ளி  நாணயம், சைக்கிள், மின்விசிறி உள்ளிட்ட  பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 29 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 4  பேர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 150-க்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.