districts

முசிறியில் 6 புதிய கட்டிடங்களை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 23 - திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம், ஏவூர்,  மண்ணச்சநல்லூர் ஒன்றியம் இருங்களூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கங்களுக்கு கூட்டுறவுத் துறையின் சார்பில்  ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ்  ரூ.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 புதிய அலுவலகக் கட்டடங்களை  நகராட்சி நிர்வா கத் துறை அமைச்சர் கே.என்.நேரு  திறந்து வைத்தார். பின்னர் 39 பயனாளி களுக்கு  ரூ.56.31 லட்சத்தில் பல்வேறு கடனு தவிகளை வழங்கினார். மேலும் முசிறி ஒன்றியம் வேங்கை மண்டலத்தில் புதிய நியாய விலைக் கடையினை திறந்து வைத்து  குடும்ப அட்டைதாரர்களுக்கு  அத்தியா வசியப் பொருட்களை வழங்கினார்.  இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்  திட்டத்தின் கீழ், முசிறி ஊராட்சி ஒன்றியத்தி லுள்ள காமாட்சிப்பட்டி, திருத்தியமலை, புலிவலம், காட்டுக்குளம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு ரூ.84.74 லட்சம் மதிப்பி லான, நான்கு புதிய ஊராட்சி மன்ற அலு வலக கட்டடங்களை திறந்து வைத்தார்.  முன்னதாக தமிழக முதலமைச்சர், ஜூன் 26 ஆம் தேதி திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள புதிய  கதவணையைத் திறந்து வைக்க வருவதை முன்னிட்டு, முக்கொம்பு மேலணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.