பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், மார்ச் 21- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ- நாம் முறையில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. இதில் 560 கிலோ பருத்தி, அதிகபட்சம் கிலோ ஒன் றிற்கு ரூ.72.89-க்கும், 250 கிலோ எள்ளு அதிக பட்சம் கிலோ ஒன்றிற்கு ரூ. 117-க்கும், 1360 கிலோ உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.88-க்கும் விலை போனது. இதன்மூலம் ரூ. 1,16,308-க்கு வர்த்தகம் நடந்தது. இதில் 10 விவ சாயிகளும், 8 வியாபாரி களும் கலந்து கொண்டனர்.
தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு
பாபநாசம், மார்ச் 21 - பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில், தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் வருடாந்திர ஆய்வு மேற் கொண்டார். வீரர்களின் அணி பயிற்சி, ஏணி பயிற்சி, நீர் தாங்கி வண்டி பயிற்சி உள்ளிட்ட பயிற்சி களை பார்வையிட்ட அவர், அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது பாபநாசம் தீய ணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் மற்றும் வீரர்கள் உடனிருந்தனர்.
அம்மாபேட்டை அருகே ரூ.51 ஆயிரம் பறிமுதல்
பாபநாசம், மார்ச் 21 - தேர்தல் நடத்தை விதிமுறை அமலானதை யடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை - வடுவூர் சாலையில் அம்மா பேட்டை அருகே, அருந்த வபுரத்தில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் அர விந்த் குமாரை மறித்து சோதனையிட்டனர். அவரி டமிருந்த ரூ.51,250 பணத் திற்கு முறையான ஆவ ணம் இல்லாததால், அதை பறிமுதல் செய்து பாப நாசம் தாலுகா அலுவல கத்தில் ஒப்படைத்தனர்.
திருவிடைமருதூரில் ரூ.1.5 லட்சம் பறிமுதல்
கும்பகோணம், மார்ச் 21- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்ட மன்றத் தொகுதி நெய்வா சல் கிராமம் வைத்தீஸ்வரன் கோயில் - கும்பகோணம் நெடுஞ்சாலையில், புத னன்று மாலை தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டனர். அப்போது பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் ஓட்டி வந்த வாகனத்தில், ரூ.1, 52,467 பணம் எவ்வித ஆவணமுமின்றி எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அந்தத் தொகையை பறக்கும் படையினர் கைப் பற்றி, திருவிடைமருதூர் தேர்தல் நடத்தும் அதி காரியிடம் ஒப்படைத்தனர்.
மாட்டுவண்டி எல்கை பந்தயம்
அறந்தாங்கி, மார்ச் 21 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே கடையாத்துப்பட்டி கிரா மத்தில் உள்ள ஸ்ரீஅரியாய கியம்மன் ஆலய 36 ஆவது ஆண்டு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, 16 ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப் பட்ட மாடுகள் கலந்து கொண் டன. போட்டியில் முதலி டத்தை பிடித்த மாடுகளுக்கு வெள்ளி தார்க்கம்பு வழங்கப்பட்டது.
“மொழிபெயர்ப்பு ஆய்வுகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம்
தஞ்சாவூர், மார்ச் 21- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளர் தமிழ்க் கருத்த ரங்கக் கூடத்தில் “மொழிபெயர்ப்பு ஆய்வுகள்” என்னும் கருப்பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. வளர் தமிழ்ப்புல முதன்மையர் இரா.குறிஞ்சி வேந்தன் தலைமை வகித்தார். கருத்தரங்க ஒருங்கிணைப்பா ளர், மொழி பெயர்ப்புத்துறை உதவிப் பேராசிரியர் சா.விஜய ராஜேஸ்வரி வரவேற்றார். மொழிபெயர்ப்புத் துறையின் தலைவர் இரா.சு.முருகன் நோக்கவுரையாற்றினார். மொழி பெயர்ப்புத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் இராம மூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியின் முதல் அமர்வாக, தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் பதிவாளர் கு.வெ.பாலசுப்பிரமணியன், “மொழி பெயர்ப்பின் இன்றியமையாமை” பொருண்மையில் உலக இலக்கியங்களில் மொழிபெயர்க்கப்படும் மொழி பெயர்ப்புகள் எந்த அளவில் சிறந்து விளங்குகின்றன. அவற்றில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்து உரையாற்றினார். 2 ஆம் அமர்வில் கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக உயிரித் தொழில்நுட்பவியல் துறை முது நிலை ஆராய்ச்சியாளர், அம்ஜென் நிறுவன முதுநிலை ஆய்வாளர் முனைவர். பழனிச்சாமி இரத்தினசாமி, “மொழி பெயர்ப்பில் ஆங்கில மொழி பயன்பாடும் உயிரியல் பாட மொழிபெயர்ப்பும்” என்னும் பொருண்மையில் மொழி பெயர்ப்பின் இலக்கணக் கூறுகளையும் சிக்கல்களையும் தீர்வுகளையும் பற்றி பேசினார். இந்நிகழ்ச்சியை மொழிபெயர்ப்புத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் விவேதா மாறன், இலக்கியத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் சு.மஞ்சுதமிழ் தொகுத்து வழங்கினர்.
வாக்காளர் விழிப்புணர்வு மாட்டுவண்டி பேரணி
அறந்தாங்கி, மார்ச் 21 - வாக்களிப்பதன் அவசியம் குறித்து, மாட்டு வண்டி களில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில், அழியாநிலை கிராமத்திலிருந்து அறந்தாங்கி நகரப் பேருந்து நிலையம் வழியாக அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை சுமார் 6 கிலோ மீட்டருக்கு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி இராமநாதபுரம் நாடாளு மன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியருமாகிய சிவ குமார் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலு வலர் அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன், மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன், தேர்தல் துணை வட்டாட்சி யர் இளஞ்சேரன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் செலவினங்கள், பணிகள் ஆலோசனை கூட்டம்
அரியலூர், மார்ச் 21 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில், வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நேகி, சிதம்பரம் மக்கள வைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேற் கொள்ளும் தேர்தல் செலவினங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்தும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் செல வின கணக்குகள், அதுதொடர்பான பணிகள் உள்ளிட் டவை குறித்தும், பணிகள் மேம்பாடு குறித்தும் சம்பந்தப் பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தேர்தல் செலவினங்கள் தொடர்பான புகார்களை தேர்தல் செலவினப் பார்வையாளர் கைப்பேசி 93638 65089 என்ற எண்ணில் தகவல்களை தெரிவிக்கலாம் என தெரிவித்தார். கூட்டத்தில் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவல ருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி மற்றும் தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், வட்டாட்சி யர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட தேர்ந்தெடுப்பு பணி
அரியலூர், மார்ச் 21- சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப் படவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட தற்செயல் தேர்ந்தெடுப்பு பணி, அரியலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவல ருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா கூறுகையில், மக்கள வைத் தேர்தலை முன்னிட்டு, சிதம்பரம் தனித் தொகுதியில் அடங்கியுள்ள அரியலூர் சட்டப் பேரவை தொகுதிக்கு 367 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 367 கட்டுப்பாட்டு கருவி களும், 398 விவிபேட் கருவிகளும் என 1,132 இயந்திரங்க ளும், ஜெயங்கொண்டம் தொகுதிக்கு 348 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 348 கட்டுப்பாட்டு கருவிகளும், 377 விவி பேட் கருவிகளும் என 1073 இயந்திரங்கள் முதற்கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் முறையில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மேற்கண்ட தொகுதியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. மேலும் 866 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள இருப்பறையில் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் மாற்றுப் பாதையில் இயக்கம்
திருநெல்வேலி, மார்ச் 21- இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக நெல்லை வழியாக செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் இரட்டைபாதை இணைப்பு பணிகள் காரணமாக வண்டி எண் 16127/ 16128 சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் 23-03- 2024 முதல் 26-03-2024 வரை நான்கு நாட்களுக்கு திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அந்த ரயில் வராது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
மோசடியாக கடன்பெற்ற 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
மோசடியாக கடன்பெற்ற 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை புதுக்கோட்டை, மார்ச் 21 - சென்னையிலுள்ள இடத்தின் பத்திரத்தை போலியாகக் கொடுத்து, ரூபாய் ஒரு கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரைச் சேர்ந்த செங்காடு என்ற முந்திரி ஏற்று மதி-இறக்குமதி நிறுவனத்தினர், கோடம்பாக்கம் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த 90 செண்ட் நிலத்துக்கான பத்திரத்தை போலியாக கொடுத்து பிணை வைத்து, 2010 ஆம் ஆண்டில் புதுக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் ரூபாய் ஒரு கோடி கடன் பெற்றுள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் தொழில் முதலீட்டுக் கழகத்தின் மேலாளர் ஆர்.விவேகானந்தன் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, இந்த வழக்கு சிபிசிஐடி காவல்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கு புதுக்கோட்டை குற்ற வியல் நடுவர் மன்றம் எண்.2இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி புதன்கிழமை தீர்ப்ப ளித்தார். குற்றம் சாட்டப்பட்ட செங்காடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஜெயபெருமாள், அவரது மனைவி ஜெ.விஜய ராணி மற்றும் எம்.அன்பரசன் ஆகிய மூவருக்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அண்ணாமலை எதையும் படிப்பது கிடையாது
அமைச்சர் எஸ்.ரகுபதி சாடல்
புதுக்கோட்டை, மார்ச் 21 - எதையும் படிக்காமலேயே உளறுவது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வாடிக்கையாகிவிட்டது என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டியில், திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றுக் காகிதம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். பொதுவாக அவர் எதையும் படித்துப் பார்ப்பது கிடையாது. இந்தத் தேர்தலில் கதாநாயகனே அந்தத் தேர்தல் அறிக்கைதான். அதனை படித்துப் பார்க்காமலேயே அவர் கருத்து சொல்கிறார். இப்படி உளறுவதே அவருக்கு வாடிக்கையாகிவிட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்கு புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு தலைமையின் கட்டளையை ஏற்று அனைவரும் வேலை செய்வோம். எங்கள் வாக்குகளை மட்டுமல்ல. அதிமுக, பாஜக தனித்தனியாக நிற்கிறார்கள். அவர்களின் வாக்குகளையும் சேர்த்தே பெறுவோம். பல மடங்கு வாக்குகளைப் பெறும் வகையில் தேர்தல் வேலை பார்ப்போம். பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என்று ஆளுநர் அடம்பிடிக்கிறார். ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது. ஒரு நாள் கழித்து வரச் சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் என்ன குட்டப் போகிறார்கள் என்று பார்ப்போம்” என்றார்.
கிராம சபை தீர்மானம் இல்லாமல் ‘சோலார் பிளாண்ட்’ அமைப்பதா?
பொதுமக்கள் எதிர்ப்பு
புதுக்கோட்டை, மார்ச் 21 - ஆலங்குடி அருகே கிராமசபை தீர்மானம் இல்லாமல் தனியார் சோ லார் பிளாண்ட் அமைப்ப தற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி தாலுகா, கீழாத் தூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தனி யார் சோலார் பிளாண்ட் அமைக்கப்பட்டு வரு கிறது. இந்த பிளாண்ட் அமைப்பதற்கு கீழாத்தூர் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லை எனக் கூறப்படு கிறது. மேலும், அதிலிருந்து எடுக்கப்படும் மின்சாரத்தை வடகாடு துணை மின்நிலை யத்தில் இணைப்பதற்காக மின்கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த மின்பா தையில் பல குடியிருப்புகள் இருப்பதால், தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சாலை மறியல் இந்த சோலார் பிளாண்ட் அமைப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் விளக்கப் படவில்லை. கிராம சபையை முறையாக கூட்டி விவாதிக்கப்படவில்லை. எனவே, தங்கள் பகுதிக்கு மேற்படி சோலார் பிளாண்ட் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என கீழாத்தூர் பகுதி இளைஞர்கள் சில தினங்களுக்கு முன்பாக சாலை மறியல் போராட் டங்களை நடத்தினர். இதனைத் தொ டர்ந்து நடைபெற்ற ஊர்க் கூட்டத்தில், மேற்படி சோலார் பிளாண்ட் அமைக்க எந்த முன்அனுமதியும் பெற வில்லை என்பதால், இது குறித்து அறிவியல் அறி ஞர்களைக் கொண்டு மக்க ளிடம் விளக்க வேண்டும். அதுவரை நடைபெறும் பணியை நிறுத்தி வைக்க வேண்டுமென ஊராட்சி மன்றத் தலைவரால் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, செவ்வாய்க் கிழமை ஆலங்குடி வட்டாட் சியர் பெரியநாயகி தலை மையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தி லும் “மேற்படி சோலார் பிளாண்ட் தொடர்பாக கிராம சபைக் கூட்டத்தை கூட்டியே இறுதி முடிவு எடுக்க வேண் டும். அதுவரை பணி களை நிறுத்தி வைக்க வேண்டுமென” பெரும் பகுதியான ஊர்ப் பிர முகர்கள் கருத்து தெரிவித்த னர். போலி சமாதானக் கூட்டம்... ஆனால், தனக்கு சாதகமான சிலரிடம் கையெ ழுத்துப் பெற்று, சோலார் பிளாண்ட் அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் போலியான சமாதானக் கூட்டத்தை நடத்தியுள்ளதாக வும் பெரும்பகுதியான ஊர் மக்கள் தெரிவித்து வரு கின்றனர். இதனால், கீழாத் தூர் மக்களிடம் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து, தமிழக அரசும் மாவட்ட நிர்வாக மும் தலையிட்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.