புதுக்கோட்டை, மார்ச் 5- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 49 பேர் காயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச் சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடிய சைத்து தொடக்கி வைத்தனர். கோட்டாட்சி யர் ஐஸ்வர்யா, ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவ கங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 610 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் காளைகள் முழு மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே அனு மதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 49 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக் காக, ஆலங்குடி அரசு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். வெற்றிபெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.