districts

img

சீர்காழி அருகே லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி: 26 பேர் படுகாயம்

மயிலாடுதுறை, மே 12-  

   மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும்  புறவழிச்சாலை பாதரக்குடி பகுதியில் வியாழனன்று ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 26 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

   திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியிலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு பேருந்து  சீர்காழி புறவழிச்சாலையான பாதரக் குடி பகுதியில் சென்றபோது சாலை யோரம் பழுதாகி நின்ற  டேங்கர் லாரி யில் மோதி, எதிரே வந்த இருசக்கர வாக னத்தின் மீதும் மோதியது.

   இந்த விபத்தில் இருசக்கர வாகனத் தில் வந்த சிதம்பரம், பள்ளிப்படை கிரா மத்தைச் சேர்ந்த பத்மநாபன், அருள் ராஜ், பாலமுருகன் ஆகிய 3 பேரும்,  பேருந்து நடத்துநர் விஜய் சாரதியும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள னர். மேலும் 15 பேர் படுகாயமடைந்த னர். இதில், 5 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

  இந்நிலையில், சீர்காழி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டிருந்தவர்களை மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து ஆறு தல் கூறியதோடு, விபத்தில் பலியான வர்களின் உடலுக்கு  மாவட்ட ஆட்சியர் அஞ்சலி செலுத்தினார்.  

புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்

    சீர்காழி புறவழிச் சாலையில் போதிய மின்விளக்குகள், எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில்,  கடந்த சில ஆண்டாக நான்கு வழி சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று  வருகிறது.  

   போதிய எச்சரிக்கை பலகை, தடுப்பு  கட்டைகள் போன்ற எந்தவித பாது காப்பு அம்சங்களும் வாகன ஓட்டி களுக்கு ஏற்படுத்தாமல் சாலை விரி வாக்கப் பணிகள் நடைபெறுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரு கின்றனர்.