தஞ்சாவூர், ஜூன் 25-
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 100 ஆவது பிறந்த நாளை யொட்டி, பூதலூர் வட்டம், வெண்டையம்பட்டி ஊராட்சி இராயமுண்டான்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளி கள் பதிவு செய்யும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித் தார்.
திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பின்னர் மாவட்ட ஆட்சி யர் தெரிவிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், இராயமுண்டான்பட்டி நடு நிலைப்பள்ளியில் 1,513, திப்பிராஜபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 1,585, அதி ராம்பட்டினம் துர்கா செல்லி யம்மன் திருமண மண்டபத் தில் 1,710 என மொத்தம் 4,808 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்” என்றார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஆர்.பாலாஜி நாதன், மருத்துவக் கண்கா ணிப்பாளர் மரு.ச.இராம சாமி, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மரு.பா. கலைவாணி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனி யார் மருத்துவமனை, சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர்.