திருவாரூர், பிப்.11- தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் 35 ஆவது சாலை பாதுகாப்பு விழாவையொட்டி தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் திருவாரூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு விழாவையொட்டி தமிழ் நாடு போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றன. இதனொரு பகுதியாக சனிக்கிழமை வாகன ஓட்டி கள் ஹெல்மெட் அணிய வேண்டும். சாலை பயணங் களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது. சாலை விதி களை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி திருவாரூர் பழைய பேருந்து நிலை யம் அருகே நடைபெற்றது. இப்பேரணியை, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்து உரை யாற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், நகராட்சி ஆணையர் மல்லிகா, வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.