districts

img

வீட்டு மனைப் பட்டா கேட்டு 350 குடும்பத்தினர் மனு

அரியலூர், மார்ச் 4- அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகேயுள்ள நாயகனைப் பிரியாள், காலனித் தெருவைச் சேர்ந்த  350 குடும்பத்தினர் தங்களுக்கு வீட்டு  மனைப் பட்டா வழங்கிடுமாறு மாவட்ட  ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா விடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு  அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், “தற் போது உள்ள சிறிய வீட்டில் ஒன்றுக் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இடநெருக்கடியால் வாழ்ந்து வரும் எங்களுக்கு சொந்த மாக மனைகள், நிலங்கள் ஏதுமில்லை. இதுகுறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே மனு அளித்ததின் பேரில், இப்பகுதி மக்களுக்கு நிலம் வழங்கு வதற்காக வாணத்திரையன் பட்டிணம்  கிராமத்தில் நிலத்தை அரசு கையகப் படுத்தியது. ஆனால் இதுவரை நிலத்தைப் பிரித்து பட்டா வழங்க வில்லை.இட நெருக்கடியில் வாழ்ந்து  வரும் எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா  வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண் டினா, மாவட்டச் செயலாளர் எம்.இளங் கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.அம்பிகா, வி.பரமசிவம், தா. பழூர் ஒன்றியச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் கள் ஆர்.செந்தில்வேல், பி.பத்மாவதி, கிராம முக்கியஸ்தர்கள் செல்வராசு, பிரபாகரன் ஆகியோர் தலைமையில் மேற்கண்ட 350 குடும்பத்தினர் மனு அளித்தனர்.