மயிலாடுதுறை, பிப்.24 - கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக இந்தியா வந்து தமிழ் மொழிக்காக உழைத்து, தமிழை முதன் முதலாக காகிதத்தில் அச்சு இயந்தி ரம் மூலம் அச்சேற்றிய ஜெர்மனி நாட்டவ ரான தமிழறிஞர் சீகன்பால்கு-வின் 305 ஆவது நினைவு தினம் வெள்ளியன்று கடைப் பிடிக்கப்பட்டது. 1706 ஜூலை 9 அன்று தரங்கம்பாடிக்கு கப்பல் மூலம் வந்தடைந்த சீகன்பால்குவுக்கு அப்போது வயது 24. என்றாலும் ஜெர்மானி யம், கிரேக்கம், எபிரெயம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் அதீத புலமைப் பெற்றிருந்த சீகன்பால்கு, மிக குறுகிய காலத்திலேயே தமிழ் மொழியையும் கற்று தமிழறிஞராகவே மாறிவிட்டார். தமிழின் பழம்பெரும் நூல்களான திருக் குறள், தொல்காப்பியம், ஆத்திச்சூடி உள்ளிட்ட நூல்களை பல மொழிகளில் மொழி பெயர்த்து, அச்சடித்து வெளியிட்டு உலகறியச் செய்தவர். சாதி, மத வேறுபாடு களை உடைத்தெறிய பல்வேறு போராட்டங் களை தனது மனைவியுடன் இணைந்து செய்துள்ளார். வெறும் 13 ஆண்டுகள் மட்டுமே தரங்கம் பாடியில் வாழ்ந்த சீகன்பால்கு கல்வி, கலாச் சாரம், சீர்திருத்தம், தமிழ்த்தொண்டு என பல புரட்சிகளை 300 ஆண்டுகளுக்கு முன்பே செய்தவர். 1719 பிப்.23 இல் தனது 37 ஆவது வயதில் தரங்கம்பாடியிலேயே உயிரிழந்தார். இந்நிலையில் வெள்ளியன்று அவரது நினைவு தினத்தையொட்டி தரங்கம்பாடி கடற் கரை சாலையிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட் டது. இதற்கு புதிய எருசலேம் ஆலயத்தின் ஆயர் சாம்சன் மோசஸ் தலைமை வகித்தார். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.