மருத்துவர் மீது போக்சோ வழக்கு
திருச்சிராப்பள்ளி, மார்ச் 9- திருச்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சைக் காக சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து வரும்படி கூறி யுள்ளனர். இதையடுத்து கடந்த மார்ச் 5 அன்று அந்த சிறுமி புத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டருக்கு பெற்றோருடன் சென் றார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்து வர் ரவி, சிறுமியிடம் பாலி யல் சீண்டலில் ஈடு பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி யடைந்த அந்த சிறுமி, இதுகுறித்து தனது பெற் றோரிடம் கூறி உள்ளார். உடனே அவர்கள் சிறு மியை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று சம்பவம் குறித்து கூறியுள்ளனர். பின்பு, சிறுமி கொடுத்த புகா ரின்பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் காவல்துறை யினர் மருத்துவர் ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
புதிய மின் மாற்றிகள் துவக்கி வைப்பு
அறந்தாங்கி, மார்ச் 9- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொடிவயல் ஊராட்சியில், கொடி வயல் வடக்கு குடியிருப் பில் 80 பயனாளிகள் பயன் பெறும் வகையிலும், கொடிவயல் கிழக்கு குடி யிருப்பில் 40 பயனாளி கள் பயன்பெறும் வகை யிலும் சுமார் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மின் மாற்றிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதனை பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநா தன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் செயற் பொறியாளர் வெங்கட்ரா மன், உதவி செயற் பொறியாளர் பிருந்தா வனன், உதவி மின்பொறி யாளர் அருணாச்சலம் மற்றும் பிரிவு பணியா ளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை பெரிய கோயிலில் சிவராத்திரி விழா
தஞ்சாவூர், மார்ச் 9- மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயி லில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக் கிழமை காலை வரை தொடர்ந்து சிறப்பு பூஜை கள் நடைபெற்றன. இக்கோயிலை யொட்டி உள்ள பெத்தண் ணன் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதில், வெள் ளிக்கிழமை மாலை 6 மணி முதல் மங்கள இசை, திருமுறை விண் ணப்பம், பரதநாட்டியம், நாத சங்கமம், பட்டி மன்றம், பக்தி இன்னிசை, தப்பாட்டம், கரகாட்டம், காளியாட்டம், காவடி யாட்டம் போன்ற நாட்டுப் புறக் கலைகள் என சனிக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற் றன. இதில் ஏராளமா னோர் கலந்து கொண்ட னர். மேலும், கோயில் முழுவதும் மின் அலங் கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
மதுபானங்கள் திருடிய வழக்கில் 3 பேர் கைது
அரியலூர், மார்ச் 9- அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே அரசு டாஸ்மாக் கடையில் ரூ.1.69 லட்சம் மதிப்பிலான மது பானங்கள் திருடிய வழக்கில் 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். திருமானூரை அடுத்த கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தி லுள்ள அரசு டாஸ்மாக் கடையில் கடந்த மார்ச் 4 அன்று நள்ளிரவு அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சேதப் படுத்தி, கடையின் பூட்டை உடைத்து, ரூ.1.69 லட்சம் மதிப்பி லான மதுபானங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து திருமானூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், திருச்சி மாவட்டம் கோவண்டாகுறிச்சி மோகன் ராஜ் (25), ஊவனூர் அர்ஜுனன் (43), செங்கரையூர் அறி வழகன் (50) ஆகிய 3 பேர் டாஸ்மாக் கடையில் மதுபானங் களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர், அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 550 மதுபான பாட்டில்கள், ரூ.30,000 ரொக்கம், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கல்லூரி வளாக நேர்காணல்: 82 மாணவிகளுக்கு பணி ஆணை
கும்பகோணம், மார்ச் 9- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார் சங்கத்தில் அமைந்துள்ள பாக்ஸ் கான் நிறுவ னத்தில், ஐபோன் உதிரி பாக பிரிவில் பணிபுரி வதற்கு மாணவியர்களுக்கு வளாக நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் இறுதியாண்டு மாணவி யர்கள் 82 பேர் கலந்து கொண்டனர். அதில் புரு டுல் எச்.ஆர் நிறுவனம் தேர்வில் பங்கேற்ற மாணவியர் 82 பேரும் பணிவாய்ப்பு பெற்றனர். தேர்வு பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அ.மாதவி பணி ஆணை வழங்கி பாராட்டினார். வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சா. ரமேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வேதியியல் துறைத் தலைவர் மா. மீனாட்சி சுந்தரம், தமிழ்த்துறை தலைவர் எஸ்.காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
டிரஸ்ட் ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த கோரிக்கை
அரியலூர், மார்ச் 9 - அரியலூரில் சனிக்கிழமை தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் பென்ச னர்கள் நலச் சங்கத்தின் 13 ஆவது ஆண்டுப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கிளைத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலர் எஸ்.ஜெயச்சந்திரன் தொடக்க உரையாற்றினார். அரியலூர் கிளைச் செயலர் எம்.சாமிதுரை ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில், திருச்சி, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், டிரஸ்ட் ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். 2022 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுக் கால பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பலன்களை வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்றவர் களுக்கு பணப் பங்களிப்பு இல்லாத மருத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தையில் ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும். நிதி காப்பகக் குழு வில் ஓய்வூதியர் சங்கப் பிரதி நிதிகளையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்ற தம்பதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கும்பகோணம், மார்ச் 8- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாகரசம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் அருளரசன். இவர் மற்றும் குடும்பத்தினர் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். கூடுதல் வருமானத்திற்காக இவர் களை சில ஆடுகளை வளர்த்து வருமானம் ஈட்டு கிறார்கள். வழக்கம் போல் அருளரசன் தனக்குச் சொந்தமான ஆடுகளை புல்வெளிகளில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது, நாகரசம்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவரும், அருளரசனுக்கு சொந்தமான ஆடு களுக்கு பப்பாளி மற்றும் வாழைப்பழத்தில் கொடிய விஷத்தை வைத்து, மேய்ச்சலுக்கு வந்திருந்த ஆடு களுக்கு போட்டுள்ளனர். இதை தின்ற நான்கு ஆடு களும் உயிரிழந்தன. இந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 50,000. சற்றுநேரத்திற்குப் பின், ஆட்டின் உரிமையாளர் சென்று பார்த்த போது ஆடுகள் சடலமாக கிடந்துள்ளன. இதையடுத்து நாச்சியார்கோவில் காவல்துறை மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்ற மல்லிகா மற்றும் குணசேகரனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
டிரோன் மூலம் திரவ நுண்ணுயிரி உரம் தெளிப்பு
தஞ்சாவூர், மார்ச் 9- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், பெருமகளூர் பகுதிகளில் பாசன நீரின்றி காயும் நெற்பயிர் களை காப்பாற்ற அட்மா திட்டத்தின்கீழ் டிரோன் மூல மாக திரவ நுண்ணுயிரி உரம் செயல்விளக்கம் 25 ஏக்கர் பரப்பளவில் தெளிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து, சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெற்பயிர்கள் போதிய மழை மற்றும் பாசன நீர் பற்றாக்குறையால் நீரின்றி காய்ந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, நீர்வள ஆதாரத்துறை அடங்கிய கிராம அளவிலான நுண்ணிய செயல் திட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கள ஆய்வு செய்தது. இந்த குழுவின் பரிந்துரையின்பேரில், பிங்க் பிக்மென்டட் பேக்டில்டேட்டிவ் மெத்திலோ பாக்டீரியா (PPFM) என்ற திரவ நுண்ணுயிரி மருந்து 25 ஏக்கர் பரப்பள வில் டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது. டிரோன் மூலம் தெளிக்கப்பட்டுள்ள திரவ நுண்ணுயிரி மருந்து நீர் இல்லாத சூழலிலும் இலை மூலம் நீர் ஆவியாதலை தடுத்து 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை நெற்பயிர்கள் தாங்கி வளர உதவி புரியும். இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவ லர் து.சிவசுப்பிரமணியன், அட்மா திட்ட அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் பயிர் அறு வடை பரிசோதனையாளர் ச.அபர்ணா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்” என கூறப்பட்டுள்ளது.
தமிழ்ப் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவு
தஞ்சாவூர், மார்ச் 9- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறையும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சுற்றுச்சூழல் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. அதனடிப்படையில், இரு நிறுவனங்களும் இணைந்து ‘2030-ஆம் ஆண்டை நோக்கிய நிலையான வளர்ச்சி’ என்றத் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மார்ச் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடந்த துவக்க விழாவை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் துவக்கி வைத்தார். தொ டர்ந்து இரு நாட்கள் தொழில்நுட்ப அமர்வுகள் நடை பெற்றன. கருத்தரங்கின் 3 ஆவது நாள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொடக்க நிகழ்வு நடந்தது. அறிவியல் புலத்தலைவர் முனைவர் ரெ.நீலகண்டன் தலைமை வகித் தார். பிஷப் ஹீபர் கல்லூரியின் துணை முதல்வர் பேரா. அ.அழகப்ப மோசஸ் துவக்கவுரையாற்றினார். இணைப் பேராசிரியர் ச.ரவிச்சந்திரன் வாழ்த்திப் பேசினார். பெரி யார் பல்கலைக்கழக பேராசிரியர் கே.முருகேசன் சிறப்பு ரையாற்றினார். இந்நிகழ்வில், இரு நிறுவனங்களின் பேரா சிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற னர். நிறைவு விழாவில் இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் கு.க.கவிதா வரவேற்றார். ஆகாஷ் ப்ளண்ட ஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சி.ரவீந்தர் சிங் சிறப்புரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழக பதி வாளர் முனைவர் சி.தியாகராஜன் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கருத்தரங்கச் செயலாளர் த.ராகேஷ் சர்மா நன்றி கூறினார்.
மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு சாகும் வரை சிறை
தஞ்சாவூர், மார்ச் 9- மகளை பாலியல் கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்தது தஞ்சாவூர் நீதிமன்றம். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வசிக்கும் 52 வயது கூலித் தொழிலாளி, தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால், கர்ப்பமடைந்த அச்சிறுமி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 2022 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டார். அப்போது, இச்சிறுமியை, தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த விவரம் தெரிய வந்தது. இதுகுறித்து, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து தந்தையைக் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை நீதிபதி ஜி.சுந்தர்ராஜ் விசாரித்து, “சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும்” விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2.50 லட்சம் நிவாரணம் வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.
தஞ்சை மாநகராட்சியில் அனைத்து தொழில்களுக்கும் ஏப்.1 முதல் தொழில் உரிமக் கட்டணம் உயர்வு
தஞ்சாவூர், மார்ச் 9- தஞ்சாவூர் மாநகராட்சியில் ஏப்ரல் 1 அன்று முதல் அனைத்து தொழி லுக்கும், தொழில் உரிமக் கட்டணத்தை உயர்த்தி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சியில், வெள்ளிக்கிழமை அவசரக் கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் ஆர்.மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தஞ்சாவூர் மாநக ராட்சியில் 1 முதல் 51 வார்டுகளில் ஆங்காங்கே சாலையில் ஏற்பட்ட பழுது களை சீரமைப்பது, சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறாக திரியும் கால் நடைகளை பிடிக்க கூடுதல் வாக னங்களை இயக்குவது, தெருவிளக்கு களை பராமரிப்பது தொடர்பாக தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023- இன்படி மாநகராட்சி பகுதிகளில் நடை பெறும் வர்த்தகம், வியாபாரங்கள், தொழிற்சாலைகள், தொழிலகம் மற்றும் பிற நோக்கங்களுக்காக இயங்கி வரும் தொழில்களுக்கு தொழில் உரிமக் கட்ட ணம் (தொழில்வரி) வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி சிறு, குறு தொழில், அனைத்து வகையான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்தல், அனைத்து வகையான தொழிற்சாலை இயந்திரங்களை உற்பத்தி செய்தல், செங்கல் சூளைகள், ஆட்டோமொ பைல் உதிரி பாகங்களை உற்பத்தி செய்தல், அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய் தல், பூச்சிக் கொல்லிகளை உற்பத்தி செய்தல், அணிகலன்கள், இசைக் கருவிகள், துப்புரவுப் பொருட்கள், சுண்ணாம்பு கால்வாய், அனைத்து வகையான ஆடைகள் உற்பத்தி செய்தல், அனைத்து வகையான வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலுக்கும் தொழில்களுக்கு ஏற்ற வாறு உரிமக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. மேலும், சிற்றுண்டிச் சாலை, சிறிய உணவகம், பெரிய உணவகம், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், மருத்துவ ஆய்வகங்கள், அரிசி ஆலை கள், ஆடு, கோழி இறைச்சி விற்பனை கடைகள், பால் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை கள், காய்கறிகள், பழங்கள், பூக்களை விற்பனை செய்யும் கடைகள், பேக்க ரிகள், பழச்சாறு கடைகள் உள்ளிட்ட அனைத்து சேமிப்பு நிலையங்கள் மற்றும் கடைகள் தொழில் உரிமக் கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீ தைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.