மயிலாடுதுறை, ஜன.19 - மயிலாடுதுறை மாவட் டம் காமராஜர் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவலகம் தோழர் கோ.பாரதி மோகன் நினைவாக கட்டப்பட்டு வரு கிறது. கட்சி தோழர்கள், பொது மக்கள், கட்சி ஆதரவா ளர்களின் நிதியுதவியில் நக ரின் மையப்பகுதியில் அலுவ லக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றுபட்ட திருவாரூர் மாவட்டத்தின் மாவட்டத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த எல்.டி. என அழைக்கப்பட்ட மறைந்த தோழர் எல்.தியாகராஜனின் இளைய மகன் எல்.டி.லெ னின், அலுவலக கட்டிட பணி களை விரைவாக முடித்திடக் கோரி, கட்டட நிதியாக ரூ. 3 லட்சத்தை, தனது தந்தை நினைவாக மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசனிடம் வழங்கினார். இந்நிகழ்வின் போது கட்டிடக் குழு தலைவர் டி. கணேசன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், சி. விஜயகாந்த் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் கள் டி.ஜி.ரவிச்சந்திரன், சி. மேகநாதன், மூத்த தோழர் கே.எம்.குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்த னர். தோழர் எல்.டி.லெனின் குஜராத் மாநிலத்தில், தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.