விருதுநகர், பிப்.19- வெம்பக்கோட்டை அருகே குண்டாயிருப்பில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டாசு வெடி விபத் தில் உயிரிழந்த குடும்பத்தின ருக்கு தலா ரூ.3 லட்சத்தை இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் வழங்கினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோ ருக்கு நிவாரணத் தொகை வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன் தலைமை வகித் தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பாதிக்கப்பட்டோருக்கு நிவா ரணத் தொகைக்கான காசோலை யை இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்பு, அவர் செய்தியாளர்களி டம் கூறுகையில், ‘‘வெம்பக் கோட்டை அருகே குண்டாயிருப் பில் தனியார் பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர் களுக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலைத் தெரித்துள்ளர். மேலும் சம்பவம் நடைபெற்ற உடன், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோரை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட அறி வுறுத்தினார். முதலமைச்சர் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந் தவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல மைச்சரின் பொது நிவாரண நிதி யில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், வெடி விபத்து நடை பெற்ற தொழிற்சாலை, தொழிலா ளர் நல நிதி செலுத்தியிருந்ததால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு அமைப்பு சார்ந்த தொழிலா ளர் நல வாரியத்தில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு தொகையும், ஈமச் சடங்கு உதவித்தொகையாக தலா ரூ.5 ஆயிரம் என தலா ரூ. 5,05,000 வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பலர் அரசு சார்ந்த வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். முதல மைச்சரிடம் கலந்து பேசி அங்கன் வாடி, சத்துணவு உள்ளிட்ட பணி யிடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித் தார். விபத்து நடைபெறும் ஆலை நிரந்தரமாக மூடப்படும் பின்பு, வருவாய்த்துறை அமைச் சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் கூறுகையில், ‘‘இதற்கு முன்னால் நடந்த வெடி விபத்தின் காரணமாக சுமார் 30 ஆலைகள் விதி முறைகளை மீறி செயல்பட்டதாக கண்டறியப்பட்டு அந்த ஆலைகள் மூடப்பட்டுள்ளன. வேதிப் பொருட்கள் கலவை செய்யும்போது ஏற்பட்ட மனித தவ றினால் இந்த விபத்து நடந்திருக்கி றது. அந்த அறையில் அளவுக்கு அதிகமான நபர்கள் பணியாற்றி யது முக்கிய காரணமாக கரு தப்படுகிறது. விதிமுறைகளை மீறும் ஆலைகள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டு, ஆலை களை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க தொழிலா ளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகிறது. தொழிலாளர்கள், உரிமையாளர்கள், விற்பனையா ளர்கள் என அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள் ளன. இதில் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஒரு விபத்து கூட நடக்காமல் இருந்திருக்கிறது. இதுபோன்று ஓரிரு நிறுவனங்கள் தான் தடுக்க முடியாத சூழ்நிலை களில், விதிமுறை மீறலாலும், மனித தவறுகள் காரணமாகவும் விபத்துக்கள் நடக்கின்றன. அத னையும் சரி செய்வதற்கான நட வடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுக்கும்’’ எனத் தெரிவித்தார்.