districts

img

தொடையூர் ஜல்லிக்கட்டில் 28 பேர் காயம்; ஒருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை, பிப்.18 - தொடையூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 728  காளைகள் பங்கேற்ற நிலையில்  28 காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அருகே தொடையூரில் நடை பெற்ற ஜல்லிக்கட்டை இலுப்பூர்  கோட்டாட்சியர் தெய்வநாயகி, திமுக வடக்கு மாவட்டச் செய லாளர் கே.கே.செல்லப்பாண்டி யன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் புதுக் கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர்  மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங் களைச் சேர்ந்த 728 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு 280 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட் டன. காளைகள் முட்டியதில் 28 பேர் காயம் அடைந்தனர். அதில், படுகாயமடைந்த 10 பேர் புதுக்கோட்டை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.  ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை, தனக்கு எதிரே வருவதைப் பார்த்த  அதிர்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூ ரைச் சேர்ந்த ஆகாஷ் (23) மயங்கி விழுந் தார். பின்னர், அவரை மீட்டு புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயி ரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.