அரியலூர், ஜன.23- அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 250 குடும்பங்கள், இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் 250 குடும்பங்கள் அளித்த மனுவில், “தா.பழூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டு மனை யின்றி வாழ்ந்து வருகிறோம். ஒரே குடி சையில், இடநெருக்கடியில் 2, 3 குடும் பங்கள் வசித்து வருகிறோம். வீட்டு மனைப் பட்டா இல்லாததால், அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் திட்டத்தி லும் பயன்பெற முடியவில்லை. பல ஆண்டுகளாக விடுத்த கோரிக் கையின் பேரில், இங்கு இந்து சமய அற நிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் அந்தப் பணிகள் மிக தாமதமாக நடை பெறுகின்றன. எனவே தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள இலவச வீட்டு மனை கள் வழங்கும் திட்டத்தை இப்பகுதியில் முதலில் செயல்படுத்த வேண்டும். அதற்கு இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை விரைந்து கையகப்படுத்தி, வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவ வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மனு அளிக்கும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் அம்பிகா, விடுதலைச் சிறுத் தைகள் கட்சி நகர செயலர் ஆ.செல் வம், துணைச் செயலர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.