தூத்துக்குடி,ஏப்.20- நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஒரேகட்டமாக நடை பெற்றது. வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு,சீல் வைக்கப்பட்டன. இந்த அறைகளுக்கு 5 அடுக்கு பாது காப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தூத்துக்குடி, திருச்செந் தூர், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதி வான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எண்ணும் மையமான தூத்துக்குடி அரசு வஉசி பொறியி யல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப் பட்டுள்ளது இந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதி கள் வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவல கம் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெகாரா மற்றும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் முன்னி லையில் பாதுகாப்பு அறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பின்பு இரண்டு பூட்டுகள் போடப்பட்டு அவற் றிற்கு சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர் தனது சீலை பதிவு செய்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரம் சிசிடிவி மூலம் வாக்கும் என்னும் மையம் கண்காணிக்கப்பட்டு வரப்படு கிறது. திருநெல்வேலி திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 1810 வாக்குச்சாவடி களில் இருந்து வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு எந்திரங்கள் அனைத்தும் வாக்குகளை எண்ணும் மையமான அரசினர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. திருநெல்வேலி, பாளையங் கோட்டை, ஆலங்குளம் ,அம்பா சமுத்திரம், ராதாபுரம் மற்றும் நாங்கு நேரி சட்டமன்ற தொகுதிகளில் இருந்து லாரிகளில் கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி வாரியாக எண்கள் இடப்பட்டு வாக்கு எண்ணும் மையமான அரசினர் பொறி யியல் கல்லூரியில் வைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறை களை மாவட்ட ஆட்சியரும் திரு நெல்வேலி தேர்தல் நடத்தும் அலுவல ருமான கார்த்திகேயன், தேர்தல் பொது பார்வையாளர் சோனாலி, நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் அரசியல் கட்சி யினரின் முகவர்களின் முன்னிலை யில் சீல் வைத்து மூடப்பட்டது. மத்திய துணை ராணுவத்தினர், தொழில் பாது காப்பு படையினர், மாநகர காவல் துறையினர் மற்றும் போலீசாரின் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாது காப்புடன் இருக்கும் இந்த அறை வாக்கு எண்ணும் நாளான ஜூன் மாதம் நான்காம் தேதி திறக்கப்படும். இந்த அறைகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேர மும் மைய அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. திருநெல் வேலி தொகுதியின் வேட்பாளர்கள் எந்நேரமும் இதனை வந்து பார்வை யிடலாம். தேர்தல் கட்சியினரின் முக வர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக் கப்பட்டு அந்த நேரங்களில் அவர்கள் வந்து பார்வையிடலாம் என அறி வுறுத்தப்பட்டுள்ளது.