districts

img

சிபிஐ கட்சியினர் 24 பேர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

மயிலாடுதுறை, ஜூலை 2-  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்காழி ஒன்றிய முன்னாள் செயலாளரும், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினராகவும், விவசாய சங்கத்தின் தேசியக்குழு உறுப்பி னராகவும் பொறுப்பு வகித்த எம்.செல்லப்பன்  தலைமையில் அக்கட்சியின் தாலுக்கா குழு உறுப்பினர்கள், 3 கிளை செயலாளர்கள் உள்ளிட்ட 24 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.  மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களை மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன் துண்டு அணிவித்து வாழ்த்தி வரவேற்றார். மாவட்டச் செயற்குழு  உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரை ராஜ், ஏ.வி.சிங்காரவேலன், டி.சிம்சன், ப.மாரி யப்பன், சி.விஜயகாந்த், சீர்காழி ஒன்றியச் செயலாளர் அசோகன், மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி ஒன்றியக் குழு உறுப்பினர் ஞானபிரகாசம் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.