districts

img

டிச.20-இல் சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறு கோயிலில் பந்தல்கால் நாட்டல்

மன்னார்குடி, நவ.24 - காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் டிச.20 அன்று நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழா வுக்கான பந்தல்கால் முகூர்த்தம் வியாழ னன்று நடைபெற்றது. மங்கல வாத்தியங்கள்  முழங்க பந்தல்கால்கள் உள்பிரகாரத்திலும், வெளிப் பிரகாரத்திலும் நடப்பட்டன.  இதில் தருமபுரம் ஆதீன கட்டளை  விசாரணை கந்தசாமி தம்பிரான்  சுவாமிகள், நிர்வாக அதிகாரி  (கோயில்கள்) கு.அருணகிரி நாதன், கிராம மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த அக்.27 அன்று பந்தல் கால் முகூர்த்தத்துக்கான ஏற்பாடு கள் மேற்கொள்ளப்பட்ட நிலை யில், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை நிகழ்வில் பங்கேற்க வர வில்லை. அவர் பங்கேற்காமல் பந்தல்கால் முகூர்த்தம் செய்யக் கூடாது என தர்பாரண் யேஸ்வரர் தேவஸ்தானத்துக்குச் சொந்த மான 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அன்றைய தினம்  பந்தல்கால் முகூர்த்தம் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.