சிவகாசி, ஆக.20-
சிவகாசி அருகே காவல் சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் கார் வாங்கித் தருவதாக ரூ.2.25 இலட்சம் வரை மோசடி யில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியை சேர்ந்த வர் சீனிவாசன்.இவர் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். இவர் பழைய கார் ஒன்றை வாங்க முடிவு செய்தார். இதுகுறித்து நண்பர்களிடம் பேசி கொண்டிருந்தாராம். அப்போது சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் அவர் பேசுவதை கவனித்துள்ளார். பின்னர், தலைமை செயலகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள காரை வாங்கித் தர ரூ. ரூ.6.75 லட்சம் செலவாகும் என சீனிவாசனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதனை நம்பிய சீனிவாசன், ரமேஷ்குமார் செல்போனுக்கு ரூ.1 லட்சம் அனுப்பியுள்ளார். பின்னர் வாகன பதிவுக்காக ரூ.25 ஆயிரத்து 750 தேவை என்று ரமேஷ்குமார் கூறவே அதையும் அனுப்பி வைத்தாராம். இதையடுத்து, மேலும் ரூ.1 லட்சம் வரை ரமேஷ்குமார் பெற்றுள்ளார். இந்த நிலையில் காரை பார்க்க வேண்டும் என சீனிவாசன் கேட்டுள்ளார். அப்போது பதிவு எண் தெரி யாத சில வாகனங்களின் படங்களை ரமேஷ்குமார் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் கார் வாங்குவதை உறுதி செய்ய மேலும் ரூ.1 லட்சம் வேண்டும் என ரமேஷ்குமார் கேட்டுள்ளார். இதனால், சந்தேகமடைந்த சீனிவாசன் பணத்தை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ்குமார், சீனிவாசனை வேறு நபர் மூலம் மிரட்டினாராம்.
எனவே, இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலை யத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரமேஷ்குமாரைத் தேடி வருகின்றனர்.