மேற்குவங்க முன்னாள் முதல்வர் தோழர் ஜோதிபாசுவின் 15 ஆம் ஆண்டு நினைவுதினம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் புதனன்று கடைப்பிடிக்கப்பட்டது. சங்க மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சிபிஎம் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் தோழர் ஜோதிபாசு உருவப்படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.