மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் 8 புதிய குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.