districts

img

தேசிய குழந்தைகள் அறிவியல் மண்டல மாநாட்டில் 145 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு

புதுக்கோட்டை, நவ.6 - புதுக்கோட்டை மாவட்டம் திருவ ரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அறிவி யல் மண்டல மாநாட்டில் 10 மாவட்டங்க ளில் இருந்து 145 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், மத்திய அரசின் விஞ்ஞான தொழில்நுட்ப பரிமாற்றத் துறையும் இணைந்து 31  ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் கிழக்கு மண்டல மாநாட்டை புதுக்கோட் டையை அடுத்த திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் சனிக் கிழமை நடத்தியது. மாநாட்டின் தொடக்க விழாவிற்கு அறி வியல் இயக்க மாவட்டத் தலைவர் ம.வீர முத்து, புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இயக்குநர் ஆர்.துரை, செயலா ளர் எம்.ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்ததோடு, தானி யங்கி விதை எந்திரத்தையும் திறந்து வைத்தார். புதுக்கோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்து ராஜா, அறிவியல் இயக்க மாநிலச் செய லாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், பொருளா ளர் ஆர்.ஜீவானந்தம், துணைத் தலை வர் எம்.மாணிக்கத்தாய், கல்லூரி மேலா ளர் ஆர்.நெப்போலியன் உள்ளிட்டோர் பேசினர். கருத்தரங்கம் மாநாட்டில் பங்கேற்ற வழிகாட்டி ஆசிரி யர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நலக்  குழுத் தலைவர் க.சதாசிவம் தலைமை யில் கருத்தரங்கம் நடைபெற்றது. ‘அறிவி யல் பார்வையில் சுற்றுச்சூழல்’ என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் வி. சேதுராமன், ‘அறிவியல் பார்வையில் கல்வி’ என்ற தலைப்பில் பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன் ஆகியோர் பேசினர். பரிசளிப்பு, பாராட்டு நிகழ்வு நிறைவு விழாவுக்கு மாநில ஒருங்கி ணைப்பாளர் வி.சுகுமாரன் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் அருண்விவேக் வரவேற்றார். இம்மாநாட் டில் கிழக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட் டங்களில் இருந்து 145 ஆய்வுக் கட்டு ரைகளை மாணவர்கள் சமர்ப்பித்தனர். 300-க்கும் மேற்பட்ட குழந்தை விஞ்ஞானி களும், 200-க்கும் மேற்பட்ட வழிகாட்டி ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். மாநாட்டில் 47 சிறந்த ஆய்வுக் கட்டு ரைகள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆய்வு கட்டுரைகள் கோவை மாவட்டத்தில் நவம்பர் 25, 26  தேதிகளில் நடைபெறவுள்ள தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் பங்குபெற உள்ளன. ஆய் வறிக்கைக்கான தொகுப்பை மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் சமர்ப் பித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.ராமதிலகம் நன்றி கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து  வல்லவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி – கிருஷ்ணன், மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - இய லினி, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - கீர்த்திஸ்ரீ, புதுக்கோட்டை ராணியார் அரசு  மகளிர் மேல்நிலைப்பள்ளி - பா.உ. தியானோ, கிர்த்திகா, புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளி – கிஷோர்குமார், திருக் கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி - முஹமது பயாஸ் குழு வினர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு  செய்யப்பட்டன.