districts

img

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி 138-ஆவது பிறந்தநாள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மரியாதை

புதுக்கோட்டை, ஜூலை 30-  

     டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் 138- ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு புதுக் கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளா கத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு  மாவட்ட ஆட்சியிர் ஐ.சா.மெர்சி ரம்யா  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். பின்னர் அவர் தெரிவித்தது:

    புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்  பில், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண்  மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி  அம்மையாரின் திருவுருவச் சிலையை மே மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொ லிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இந்நிலையில் அம்மையாரின் 138-ஆவது  பிறந்தநாளான இன்று (ஞாயிறு) அவரது  உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

    புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வரு வாய் அலுவலர் மா.செல்வி, அரசு மருத்  துவக்கல்லூரி முதல்வர் (பொ) ஜி.ஏ.ராஜ் மோகன், வருவாய் கோட்டாட்சியர் முரு கேசன், நகர்மன்றத் தலைவர் ததிலகவதி செந்தில், செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் ரெ.மதியழகன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.