districts

விருதுநகரில் 11 மாதங்களில் 120 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

விருதுநகர், மார்ச் 12- விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் 200 குழந்தை திரு மணங்கள் கண்டறியப்பட்டு அதில்  120 திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளதாக என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட அரசு மருத்து வக் கல்லூரி கலையரங்கில் வன் கொடுமை விழிப்புணர்வு பயிற்சி, குழந்தை திருமணம், உயர்கல்வி மற்றும் இயற்கை வளம் பாதுகாத்தல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலை வகித்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் கூறு கையில், ‘‘விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் சுமார் 200  குழந்தை திருமணங்கள் கண்டறி யப்பட்டு, 120 குழந்தைத் திருமணங் கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இராஜபாளையம், சிவ காசி, திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்க ளில் அதிக அளவில் குழந்தை திரு மணங்கள் நடக்கின்றன. கடந்த ஓராண்டில் 19 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் கருத்தரிப்பு 300 முதல் 400 வரை உள்ளது. குழந்தை  திருமணத்தை தடுப்பதற்காக பல்  வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், அதையும் மீறி நடக்கும் குழந்தை  திருமணத்தினால், 19 வயதுக்குட்பட்டு  குழந்தைப்பேறு அடையும், தாய்மார களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. மேலும், 19 வயதுக்கு உட்பட்ட பெண் கள் பிரசவிக்கும்போது குழந்தை எடை குறைவாக பிறக்கிறது.  அதனால் வளர்ச்சி குறைகிறது. படிப்பில் கவனமின்மை ஏற்படுகிறது. இதனால் இடைநிற்றல் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டோடும் இருக்கின்றது. இதனை சட்டப்பூர்வ மாக தடுக்க வேண்டும். எதிர்கால சமு தாயத்தை காக்க வேண்டும்.  சாதிய வேறுபாடுகள் தொடர்பான வன்கொடுமைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை ஆரம்ப கட்டத்தி லேயே கண்டறிவதன் மூலம் பிரச்சனை களை தடுக்க முடியும். மேலும், பழங்குடியினர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்தும், அவர்களுக்கான அரசு திட்டங்கள் பற்றியும் தெரிந்து கொண்டு, அவர்கள்  பொருளாதார ரீதியாக உயர்ந்திட உதவ  வேண்டும். கடந்த 1991 முதல் 2017 வரை விருது நகர் மாவட்டத்தில் நீர் நிலைகளின் 33 சதவிகித பரப்பளவு குறைந்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலை களை பாதுகாக்க வேண்டும்’’ என் றார்.  இதில், மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் வளர்மதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலு வலர் ரமேஷ், உதவி இயக்குநர் (ஊரா ட்சிகள்) விசாலாட்சி, மாவட்ட சமூக நல  அலுவலர் ஷீலா சுந்தரி, தாட்கோ மேலா ளர் ரஞ்சித், தனி வட்டாட்சியர் ரவீந்தி ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.