கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல் பேரூராட்சியில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.12.76 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட அம்மாபேட்டை நல்ல தண்ணீர் குளம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட காரிய கொட்டகை பூங்காவை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் திறந்து வைத்தார். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி, வடக்கனந்தல் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் கமலக்கண்ணன்,வார்டு உறுப்பினர்கள் விருத்தாம்பாள் கோவிந்தராஜ் கோ. பாலகிருஷ்ணன் ரம்யா ராஜவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.