எம்.சின்னதுரை எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் புதுக்கோட்டை, செப்.14- புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.11.40 கோடி மதிப்பில் நீர் ஏற்றும் நிலை யம் அமைப்பதற்காக கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை அடிக்கல் நாட்டினார். கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகு திக்கு உட்பட்ட கீரனூர் பேரூராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இருந்து நீரைக் கொண்டு வருவதற்காக அம்ருத் 2.0 திட்டத்திலிருந்து ரூ.11 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நீர் ஏற்றும் நிலையமும், ரூ.1.5 லட்சம் மதிப்பீட் டில் 3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு சட்டப்மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை அடிக்கல் நாட்டி னார். திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டின், குன்றாண்டார் கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் கே.என்.ஆர்.போஸ், கீரனூர் பேரூராட்சித் தலைவர் ஜெயம்மீரா ரவிக்குமார், செயல் அலுவலர் கரு.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.