தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள, பாரத் கல்வியியல் கல்லூரியில் 10 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்வியியல் கல்லூரி முதல்வர் பி.சுபத்ரா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத் தலைவரும், டாக்டர் ஜே.ஸி.குமரப்பா கல்விக் குழுமத் தலைவருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். இதில், 170 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.