கோனேரிராஜபுரத்தில் கி.பி.10 ஆம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால மூத்த தேவி (தவ்வை) சிற்பத் தினை கும்பகோணம் வட்டார வர லாற்று ஆய்வு சங்கத்தினர் கண்டறிந் தனர்.
இதனைப் பற்றி சங்க நிறுவனரும், வரலாற்று ஆய்வாளருமான கும்பகோ ணம் ஆ. கோபிநாத் கூறியதாவது:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தா லம் தாலுகா கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரத்தில் ஓய்வு பெற்ற விஏஓ நாராயணன் மற்றும் வர லாற்று ஆய்வாளர் திருநல்லம் சு.சுவாமி நாதன் ஆகியோர் கொடுத்த தகவலின் படி கள ஆய்வு மேற்கொண்டதில் கோ னேரி ராஜபுரம் வடக்குத்தெருவின் வயல்வெளியினை ஒட்டிய வாய்க்கா லில் கிடந்த கல்லினை எடுத்து தூய்மைப்படுத்தி பார்த்ததில் இந்த சிற்பமானது மூத்த தேவி என்று அடை யாளப் படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்றில் திருநல்லம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரின் நடராஜர் உலகப்புகழ் பெற்றவர். இவரது ஆலயத்திலிருந்து சுமார் 1.5 கி.மி தொலைவில் வயல்வெளியில் இந்த சிலை கிடைத்திருப்பது சிறப்பான ஒன்றாகும். 3.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்ட சோழர் காலத்தை சேர்ந்த இந்த சிலையில் மாந்தன், மாந்தியுடன் அன்னை மூத்த தேவி காட்சி தருகிறார். வசீகரமான முகம், தலையில் கரண்ட மகுடம், காதில் குழைகளும் , கழுத்தில் கண்டிகை, சவடி, சரப்பளி ஆகியவை அணிந்து அமர்ந்த நிலையில் உள்ளார். சிலையின் மார்பு பகுதி சிதைவுக்குள்ளாகியுள்ளது.
இவருக்கு இடது பக்கத்தில் மகன் மாந்தன் சன்ன வீரம் தரித்தும், வலது பக்கத்தில் மகள் மாந்தி சுகாசனத்தில் அமர்ந்த கோலத்திலும் உள்ளார்கள். மாந்தியின் முகமும் சிதைவுக்குள்ளாகி உள்ளது. மூத்த தேவியின் சின்னமான காக்கை கொடி மாந்தியின் அருகில் காணப்படுகிறது .
பல்லவர்களின் ஆட்சியில் தமிழர் களின் தாய் தெய்வமாக மூத்த தேவி வழிபாட்டில் இருந்துள்ளார். பிற்கால சோழர்கள் காலத்திலும் சேட்டை என்ற பெயரில் மூத்த தேவி வழிபாடு நடை பெற்றுள்ளதை கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன.
காலப்போக்கில் ஆலய வழிபாட்டி லிருந்து மறைந்து இன்று இவ்வாறான வயல் சார்ந்த பகுதிகளில் காணப்படு கிறார். இவரை போற்றி பாதுகாக்க வேண்டியது வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் மக்களின் கடமையாகும். இவ்வாறு கோபிநாத் தெரிவித்தார்