புதுக்கோட்டை, ஏப்.20-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அமரசேந்திரபுரம் கிராமத்தில் வசிப்பவர் கூத்தையா. இவரது மனைவி சுதேசி (19). நிறைமாத கர்ப்பிணியான இவரி முதல் பிரசவத்திற்காக அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வியாழனன்று 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே சுதேசிக்கு பிரசவ வலி அதிகமாகியுள்ளது.
இதனால், ஓட்டுநர் ஜெயச்சந்திரன் ஆம்புலன்ஸ்சை சாலை ஓரமாக நிறுத்தினார். பின்பு அவசர மருத்துவ உதவியாளர் செல்வகுமார் உடனடியாக பிரசவம் பார்த்தார். இதில் சுதேசிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு அவர் புதுக்கோட்டை மாவட்டம் அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
உரிய நேரத்தில் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயச் சந்திரன் மற்றும் மருத்துவ உதவியாளர் செல்வகுமார் ஆகியோரை உறவினர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பாராட்டினர்.