districts

img

தஞ்சாவூரில் ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

தஞ்சாவூர், டிச.21 –  தஞ்சாவூரில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1000 கிலோ குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 3 பேரை கைது செய்தனர்.   தஞ்சாவூர், ரெத்தினசாமி நகரில் உள்ள ஒரு வீட்டில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா  போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு கள்ளச் சந்தையில் விற் பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை காவல்துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து  அப்பகுதியை ரகசியமாக கண்காணித்தனர். இதற்கிடையில், அந்த வீட்டிற்கு வந்த காரை காவல்துறையினர் மடக்கினர். அதில் குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. மேலும், வீட்டில் ஆய்வு செய்த போது, அறைகள், மாடிப்படி, வாசல், கார் உள்ளிட்ட பல இடங்களில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த கெளதம் (30), வீரமணி (40), மன்னார்குடியை சேர்ந்த தினேஷ், (30), ஆகிய மூவரும்  தப்பியோடினார். தொடர்ந்து தனிப்படையினர் விரட்டிப் பிடித்து மூவரையும் கைது செய்தனர். பின்னர், வீட்டில் அடுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறை யினர், கார், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.