மதுரை, மே 6-
இலங்கையின் முல்லை தீவிலிருந்து மூன்று குழந் தைகள், நான்கு பெண்கள் உட்பட பத்து பேர் ஒரு கப்ப லில் தனுஷ்கோடி தீவுக்கு சனிக்கிழமை அதிகாலை வந்ததாக கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.
பத்து பேரும் பொருளா தார நெருக்கடி மற்றும் அத்தி யாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் அங்கு தாக்குப்பிடிக்க முடி யாமல் இலங்கையை விட்டு வெளியேறி படகு ஒன்றின் மூலம் அவர்கள் இந்தியா வந்தடைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியா வந்தது குறித்து மீனவர் ஒருவர் தெரிவித்ததாவது: கடந்த இரண்டு மாதங்களாக தினமும் வேலை கிடைக்க வில்லை. ஒரு வாரத்தில், குறைந்தது நான்கு நாட்கள் நான் சும்மா இருப்பேன். கையில் பணமில்லாமல், அரிசி மற்றும் சர்க்கரை விலை கடுமையாக உயர்ந் துள்ளது. இதனால் நாங்கள் வாழ்வது கடினமாகிவிட்டது என்றார்.
தமிழக அரசு தங்கு மிடம் மற்றும் உணவு வழங்கியதை அறிந்த நாங்கள், குறைந்தபட்சம் தற்காலிகமாவது நிம்மதி யாக வாழலாம் என நினைத்து வந்துள்ளோம். நிலைமை இலங்கையில் சீரடைந்தவுடன் நாங்கள் எங்கள் நாட்டிற்குச் செல் வோம் என்றார்.
அதிகாரிகளின் விசார ணைக்குப்பிறகு அவர்கள் மண்படம் அகதிகள் முகா மிற்கு அனுப்பிவைத்தனர். கடந்த மாதம் இலங்கை யிலிருந்து ஐந்து அகதிகள் கப்பலில் வந்திருந்தனர். இந்த மையத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ளனர்