அரியலூர் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு பொருள்கள் நகர்வு பணிக்கு ரூ.1.57 கோடி மதிப்பிலான 6 புதிய கனரக வாகனங்களை வெள்ளிக்கிழமையன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.