திண்டுக்கல், டிச.20- 1.5 லட்சம் மருந்து விற் பனை பிரதிநிதிகள் மருந்து கம்பெனிகளின் தொழிலா ளர் விரோதப் போக்கைக் கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். மக்களின் அத்தியா வசியப் பொருட்களின் மிக முக்கியமான பொருளாக உள்ள மருந்துகளின் விலை யையும், மருத்துவ உபகர ணங்களின் விலையையும் குறைக்க வேண்டும். அதற் கான ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. டிசம்பர் 20ம் தேதி நாடு முழுவதும் தொடங்கிய வேலைநிறுத்தத்தை யொட்டி திண்டுக்கல்லில் மருந்து விற்பனை பிரதிநிதி கள் புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் மதுக் குமார் தலைமை வகித்தார். செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி.ராம்குமார், சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கணேஷ்பாபு, பாலச்சந்திர போஸ், பாலமுருகன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.