districts

img

ஆவுடையார்கோவிலில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம்

அறந்தாங்கி, ஜன.10 - ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி யில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி யில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.  இத்திட்டத்தினை அறந் தாங்கி சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.டி.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.  2021-2022 ஆம் நிதி யாண்டில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு வகுப்பறை கட்டி டத்தையும் திறந்து வைத்தார். மாணவர்களை கொண்டு வகுப்பறை கட்டி டத்தை திறந்து வைத்து சிறப்பித்தார்.  நிகழ்வில் பள்ளித் தலை மையாசிரியர் தாமரைச் செல்வன், உதவித் தலைமை  ஆசிரியர் ஸ்டாலின், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.