districts

‘பூமியின் ஆரத்தை அளப்போம்’ நிகழ்வு

திருச்சிராப்பள்ளி, ஏப்.28-

   தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி இந்திய  அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த  விஞ்ஞான் பிரச்சாரின் தமிழ் பிரிவான அறிவியல் பலகை யோடு இணைந்து நடத்திய ‘பூமியின் ஆரத்தை அளப் போம்’ அறிவியல் ஆய்வு நிகழ்வில் 13 மாவட்டங்களை சேர்ந்த 2500 மாணவர்கள் பங்கேற்றனர்.

   சென்னையில் நடைபெறும் நிழலில்லா நாளை யொட்டி நிழல் இல்லாத நாளின் செயல்முறை, ஒவ்வொரு  இடத்தில் மத்திய நேர அளவீடு, பூமியின் ஆரத்தை அளக்கும் செயல்பாட்டில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட்  சயின்ஸ் சொசைட்டி, விஞ்ஞான் பிரச்சார், அறிவியல் பலகை ஆகிய அமைப்புகள் இணைந்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்து காட்டப் பட்டது. மேலும் இதன் முன்னோட்டமாக எராடோஸ் தீனஸ் முறையில் பூமியின் ஆரத்தை கண்டுபிடிக்கும் செயல்பாடும் நடத்தப்பட்டது.  

  சென்னை, காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, புதுக் கோட்டை, மதுரை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், இராமநாதபுரம், சிவகங்கை, அரிய லூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் இந்த கள செயல் பாட்டில் காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை ஈடு பட்டனர் என தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.மனோகர் தெரிவித்தார்.