அறந்தாங்கி, மார்ச் 20 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு முகாமை, தமிழ்நாடு அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வுத் துறை, தமிழ்நாடு தன்னார்வலர்கள், ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் ஒன்றிணைந்து நடத்தின. கல்லூரி முதல்வர் பொறியாளர் ச.குமார் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், போதை தடுப்பு குறித்த புகார் அளிப்பதற்கான 10581 எண்ணை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் சார்பாக தமிழ்நாடு தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர் லயன்.சர்வம் சரவணன், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுக்கோட்டை காவல் ஆய்வாளருக்கு கல்லூரி முதல்வர் மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பு மற்றும் ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆவுடையார்கோயில் இன்ஸ்பெக்டர் விஜய் கோல்டன்சிங், கல்லூரி பேராசிரியர்கள், தலைமை காவலர்கள், மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.