districts

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல், ஏப்.22- போக்சோ குற்றவாளிக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

திண்டுக்கல் தண்டல்காரன் பட்டியை சேர்ந்த 35 வயது இளைஞர் வடமதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக கூறி  பாலியல் வல்லுறவு செய்துள்ளார். 

இதனையடுத்து வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத் தில் புகார் அளிக்கப்பட்டு, கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இளைஞர் தொடர்பான வழக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி, குற்றம் உறுதி  செய்யப்பட்டதை அடுத்து இளைஞ ருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.3,500 அபராதமும் விதித்துள்ளார்.