திண்டுக்கல், ஏப்.9- திண்டுக்கல் தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து தமிழ்நாடு மாநில சிறு பான்மையினர் ஆணைய தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் திண்டுக்கல் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இதுவரை பிரதமர் தமிழகத்திற்கு 5 முறை வந்திருக்கிறார். இன்னும் நான்கு முறை வரவிருக்கிறார். 9 முறை தமிழகத்திற்கு வந்து வாக்கு கேட்கிற மோடியிடம் வாக்காளர்க ளாகிய நாம் கேள்வி கேட்க வேண்டும்.
10 ஆண்டுகள் இந்த நாட்டில் எப்படிப்பட்ட நிர்வாகம் நடந்தது? என்று வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்திலே வாக்குச்சீட்டு என்பது ஒரு குடி மகனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அதி காரம். இந்த அதிகாரத்தை சரியான நேரத்தில் சரியான நபர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் நம் உரிமை களை இழக்க நேரிடும். இந்த பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்துள்ள ‘பாதந்தாங்கி பழனிசாமி’ வந்தால் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உண்டு.
2014-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி பெட்ரோல் விலை என்ன இருந்தது? இன்றைக்கு பெட்ரோல் விலை ரூ.100, டீசல் விலை ரூ.90, சமையல் கேஸ் விலை ரூ.1250, கச்சா எண்ணெய் விலை எவ்வளவு என்று சொன்னால் ஒரு பேரல் 78 டாலர். 2014-ம் ஆண்டு இதே நாளில் பெட்ரோல் விலை ரூ.70, டீசல் விலை ரூ.60, சமையல் கேஸ் விலை ரூ.350 முதல் ரூ.400. அன்றைக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய் ரூ.130 டால ருக்கு விற்றது. இந்த விலையை வைத்து விலையேற்றம் என்று சொல்லித்தான் மோடி ஆட்சிக்கு வந்தார். அப்போதைய பிரதமர் மன் மோகன் சிங்கை சொல்லக் கூடாத வார்த்தைகளால் வசைபாடினார். இன்றைக்கு அவர் எங்காவது பேசுகிறாரா? அவர் மட்டுமல்ல, அவருடன் உள்ள அமைச்சர்களும் இந்த கேள்விக்கு பதில் சொல்வ தில்லை.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேட்டால் தமிழ் நாட்டைச் சேர்ந்த முருகன் என்ற பாஜக அமைச்சர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று பதில் சொல்கிறார். நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் இதே பதிலைத்தான் சொல்வார். மணிப்பூரில் இரண்டு பெண் களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றார்கள். இதே போன்ற கொடுமைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த சம்பவத்திற்காக பிரதமர் இதுவரை வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
அந்த சம்ப வத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூட தெரி விக்கவில்லை. இப்படிப்பட்ட சம்பவம் நடந்தால் எனது அரசு கடுமையான நடவ டிக்கை எடுக்கும் என்று ஒரு பிரதமர் சொல்ல வேண்டாமா? அந்த மாநி லத்தில் பாஜக முதலமைச்சர் தான் உள்ளார். ஒன்றரை ஆண்டுகள் காவல்துறை, நீதித்துறை என எதுவும் செயல்படவில்லை. இந்த மாநிலத்தில் 2 நாடாளு மன்றத் தொகுதி உள்ளது. அந்த 2 தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக 6 முறை பிரதமர் சென்றார். இவ்வளவு சம்பவம் நடந்த பிறகு ஒரு முறை கூட அங்கு போகவில்லை. இவர் தான் நம் நாட்டின் பிரதமர். இவர் மீண்டும் வரக்கூடாது’’ என்று பேசினார்.