districts

img

பாசிசப் போக்கை அனுமதிக்க முடியாது

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் இந்த நாட்டின் பாது காப்புக்கு மிகப்பெரிய அச்சு றுத்தல் ஆகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு  பிரச்சனை குறித்து விவாதம் செய்யக்கூடாது என்று பாஜக அரசு மறுக்கிறது. மொத்தம்141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பாசிசப் போக்கோடு மோடி அரசு நடந்து கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கூட பாதுகாக்க முடியாத மோடி அரசாங்கம் இந்திய நாட்டை நாங்கள்  தான் பாதுகாப்போம் என்று எதை வைத்து சொல்கிறது என்று புரியவில்லை. நீங்கள் எப்படி இந்த நாட்டைப் பாதுகாக்க போகிறீர்கள்? உள்துறை அமைச்சர் ஏன் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க மறுக்கிறார்? அப்படி விவாதித்தால், ஒரு வேளை, தங்களது அரசின் பல வீனத்தை ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும் என்பதற்காகத் தான் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சி  உறுப்பினர்களை சகட்டு மேனிக்கு சஸ்பெண்ட் செய்கிற போக்கு நிலவுகிறது. மோடி அரசாங்கத்தின் போக்கு மிக வன்மையான கண்டனத்திற்கு உரியது. நாடு முழுவதும் இதற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இயற்கை இடர்பாடு காரணமாக கடும் பாதிப்பு இருப்பதினால் அந்த இயக்கத்தை நடத்த இயலாத நிலை உள்ளது. நிச்சயமாக மோடி அரசின் இது போன்ற பாசிசப் போக்கை நாம் அனுமதிக்கக் கூடாது.