திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் மகளிர் கூட்டமைப்பு சார்பில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை நெகிழி மறு சுழற்சி மையத்தினை, தமிழக சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் பொதுக் கணக்குக் குழுவினர் புதனன்று ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஆத்தூர் ஒன்றிய சேர்மன் மகேஷ்வரி, ஒன்றியச் செயலாளர் முருகேசன், பஞ்சம்பட்டி ஊராட்சி தலைவர் பாப்பாத்தி, செயலர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.