districts

img

சனாதனம் ஒரு சமூக ஒடுக்குமுறை கருவி

திண்டுக்கல், செப்.16- சனாதனம் என்பது ஒரு சமூக ஒடுக்குமுறை கருவியென்று திண்டுக் கல்லில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் பேசினார். மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்  அவர் பேசுகையில், ‘‘இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் 80 விழுக்காடு மேல்  இந்துக்கள் என்று மக்கள் தொகை கணக் கெடுப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியில் மோடி யிலிருந்து அமித்ஷாவிலிருந்து அனை வரும், நாங்க இந்துக்களுக்காக இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்ப நாங்க சனாதனத்திற்காக இருக்கிறோம் என்கிறார்கள்.  சனாதனிகளே ஒன்றுபடுங்கள் என்று நாட்டின் பிரதமரே சொல்கிறார். அது ஒரு வாழ்க்கை முறை என்கிறார்கள். சனாதனம் என்பது சாதியம், சனாதனம் என்பது பெண்ணடிமைத்தனம், பிற மதத்தின் மீது வெறுப்பு, சனாதனம் என்பது இந்த மூன்றையும் நிலை நிறுத்த செய்கிற அராஜகம்.
போலி அமைச்சரா?
சனாதனம் பற்றி பேசிய உதயநிதி தலையைவாங்குவேன் என்று பேசுகிறாரே என்று கேட்டால் அவர் போலிச்சாமியார் என்கிறார்கள். சனாதனம் பற்றி பேசினால் நாக்கை அறுப்பேன், கண்ணை பிடுங்குவேன் என்று ஒரு ஒன்றிய அமைச்சர் கூறி யிருக்கிறார். அந்த அமைச்சர் போலி அமைச்சரா? இப்படி வெளிப்படை யாக, அநாகரீகமாக, வெட்கமே இல்லாமல் நாங்கள் சனாதனிகள் தான்  என்கிறார்கள். இந்த சனாதனிகளால் இந்துக்களுக்குத் தான் ஆபத்து. அடித்தட்டு இந்துக்களுக்கு ஆபத்து.  மத்தியப் பிரதேசத்தில் ஒரு  பெண், முன்னாள் ராணி என்றாலும் அவரை கோவிலுக்குள் விடாமல் விரட்டி தள்ளிவிட்டார்கள். அங்கிருக் கக்கூடிய பாஜக அரசு அந்த பெண்ணை கைது செய்துள்ளது. அந்த  பெண் இந்து. அவரை கோவிலுக்குள் விடாமல் தடுத்தவர்கள் சனாதனிகள். உத்தரப்பிரதேச முதல்வர் சனாதன தர்மமே தேசிய மதம் என்கிறார். சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை எதிர்க்கிறார்கள் என்கிறார்.  இந்த சனாதனிகள் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை சுக்குநூறாக்க கிளம்பியிருக்கிறார்கள். அதை மக்களுக்கு சொல்ல வேண்டுமா? வேண்டாமா? நான் ஏன் சனாதனத்தை ஆதரிக்கிறேன் என்று பெரியார் பிறந்த நாளில் தமிழ்நாட்டில் கூட்டம் நடத்தப் போகிறார்கள். சனாதனத் திற்கும், மதத்திற்கும் சம்பந்தம்இல்லை.
வர்ணாசிரமம் ஒழிவதே காந்தியின் நிலைப்பாடு
சனாதனம் என்பது ஒரு சமூக ஒடுக்குமுறைக் கருவி. காந்திய சிந்தனைக்கும் சனாதனத்திற்கும் சம்பந்தம் இல்லை. காந்தியின் கடைசி  காலத்தில் ஆலய நுழைவு போராட்ட த்திற்குப் பிறகு வர்ணாசிரமம் இருக்கும் வரை தீண்டாமை இருக்கும். எனவே, வர்ணாசிரமமும் ஒழிய வேண்டியது தான் என்பது காந்தி நிலைப்பாடு.  எனது நண்பர் ஒருவர் கேட்டார். ஏன் சனாதனத்தை எதிர்க்கிறீர்கள் என்று. வர்ணாசிரமத்தில் சனாதனம் உண்டா? இல்லையா என்று நான் கேட்டேன், பதிலில்லை. காந்தி வர்ணா சிரமம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உடையவர்தான்.  ஆகவே காந்தியின் பிறந்த தின மான அக்டோபர் 2 அன்று ‘நாட்டைக் காப்போம்’ என்ற இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் 6 மையங்களில் இருந்து பிரச்சாரக் குழு கலைப் பயணம் தொடரவிருக்கிறது. ஏறக்குறைய 90 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மதுரையில் அக்டோபர் 17 அன்று நிறைவு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்’’ என்று அருணன் வேண்டுகோள் விடுத்தார்.