districts

img

நத்தம் பகுதிகளில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் பிரச்சாரம்

நத்தம், ஏப்.1- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் நத்தம் நகர பகுதிகளில் திங்களன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

 நத்தம் கோவில்பட்டி புளிக் கடை நிறுத் தத்தில் துவங்கியது பிரச்சாரம். கோவில்பட்டி பேருந்து நிறுத்தம், முஸ்லிம் தெரு, அவுட்டர் பகுதி, ரவுண்டானா ஆகிய பகுதிகளில் ஆர்.சச்சிதானந்தம் வாக்குச் சேகரித்தார்.

 பிரச்சாரத்தில், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, தொகுதி பொறுப்பா ளர் ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.ஆண்டி அம்பலம், மாவட்டப் பொருளாளர் விஜயன், தெற்கு ஒன்றியச் செயலாளர் ரத்தினக்குமார், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, நகரச் செயலாளர் ராஜ்மோகன், மாநிலப் பொ துக்குழு உறுப்பினர் முத்துகுமாரசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இப்ரில் ஆசித், சிபிஎம் மாநி லச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ராணி, முத்துச்சாமி, ஒன்றியச் செயலா ளர் சின்ன கருப்பன், விடுதலை சிறுத்தை கள் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்முகம், ஒன்றியச் செயலாளர்கள் மயில்ராஜ், முத்து மாணிக்கம், காங்கிரஸ் நகரத் தலைவர் முகமது அலி, சிபிஐ தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.