districts

img

100 நாள் வேலையை 30 நாட்களாக குறைத்ததே மோடி அரசின் ‘சாதனை’

நத்தம், ஏப்.9- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை நத்தம் தெற்கு, வடக்கு ஒன்றிய பகுதிகளில் வாக்குச் சேகரித்தனர்.

நத்தம் ஒன்றியம் முளையூர், உலுப்பக் குடி, புண்ணப்பட்டி, பண்ணுவார்பட்டி, மதுக்காரம்பட்டி, சாத்தாம்பாடி கோம ணம்பட்டி, வத்திபட்டி, லிங்கவாடி, பரளிபுதூர், மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சமுத்திராபட்டி, பூதகுடி, தேத்தாம்பட்டி, பூசாரிபட்டி, சிறுகுடி, நடுவனூர், ஆவிச்சிப்பட்டி, பண்ணியாமலை, புதுப்பட்டி, புதூர், குட்டுப் பட்டி, அரவக்குறிச்சி, கருத்தலக்கம்பட்டி, கோசுகுறிச்சி, குரும்பபட்டி, மங்களப்பட்டி, செந்துறை, கோட்டைப்பட்டி, பிள்ளையார் நத்தம், குடகிபட்டி, மணக்காட்டூர் ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்.  

பிரச்சாரத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், ‘‘நத்தம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி வரும் கல்வியாண்டில் அரசு கல்லூரி அமைக்கப்படும். மேலும் அம ராவதி-காவிரி நீர் குழாய்கள் மூலம் திண்டுக்கல் பகுதிக்கு கொண்டு வர நடவ டிக்கை எடுக்கப்படும்’’ என்றார். வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் பேசுகை யில், ‘‘கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை பற்றியோ, தில்லியில் 1 ஆண்டு களாக போராடிய விவசாயிகள் பற்றியோ கவலைப்படாத, எந்தவித உதவியும் செய்யா தவர்தான் பிரதமர் மோடி. மேலும் 100 நாள் வேலையை 30 நாட்களாக குறைத்ததுதான் மோடி அரசின் சாதனை.  

‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமை ந்தவுடன், 100 நாள் வேலை நாட்களை 150 நாட்களாகவும், சம்பளம் ரூ.400-ஆக வும் உயர்த்தப்படும். சிலிண்டர் விலை  ரூ.500-ஆக குறைக்கப்படும். விவசாயப் பொ ருட்களுக்கான விலையை நிர்ணயிப்பதற்கு சட்டம் இயற்றப்படும். இதனால், இப்பகுதி யில் உள்ள மாம்பழ விவசாயிகள் மிகுந்த பயனடைவர்’’ என்று கூறினார்.

பிரச்சாரத்தில் திமுக தொகுதி பொறுப்பா ளர் ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.ஆண்டி அம்பலம், மாவட்டப் பொருளாளர் விஜயன், ஒன்றி யச் செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச் சாமி, பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, நகரச் செயலாளர் ராஜ்மோகன், மாணவரனி மாநில துணை செயலாளர் பொன்ராஜ்,மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமாரசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜ கோபால், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிவா, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன்,மாநில குழு உறுப்பினர்கள் ஆனந்த்,சாமி நட ராஜன்,தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் முத்து, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ராணி, முத்துச்சாமி, மாவட்டக் குழு  உறுப்பினர்கள் ஸ்டாலின், பெருமாள், ஒன்றியச் செயலாளர் சின்ன கருப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்முகம், ஒன்றியச் செய லாளர்கள் மயில்ராஜ், முத்துமாணிக்கம், காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் பழனி யப்பன், செல்வம், சிபிஐ தாலுகா செயலா ளர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.