districts

img

மோடியின் கேஸ் விலை குறைப்பு ஒரு கபட நாடகம்

திண்டுக்கல், ஏப்.4- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆத ரித்து திரைக்கலைஞர் ரோகிணி ஏப்ரல் 3, 4 அன்று பழனி, கொடைக்கானல், திண்டுக்கல் நகர்,  ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.  வியாழனன்று நடைபெற்ற வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், ‘‘மோடியின் பாஜக அரசு மகளிர் தினத்தன்று கேஸ் விலையை 100 ரூபாய் குறைத்தது.

அதுசரி, கேஸ் விலையை ரூ.1100 வரை ஏற்றியது யார் என கேட்டால் வாய் திறப்ப தில்லை. ‘‘இவரே குண்டு வைப்பாராம் இவரே எடுப்பாராம்’’ என்று, திரைக்கலைஞர் ரகுவரன் ஒரு திரைப்படத்தில் பேசிய வசனம் போல, மோடி செயல்படுகிறார். பெண்களின் பிரதான பிரச்சனைகளுள் ஒன்று குடும்ப செலவினங்களை சமாளிப்ப தாகும். அந்த செலவினங்கள் பாஜக ஆட்சி யில் உச்சபட்சமாக அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.  

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறு தியை நிறைவேற்றாததால் தான் விவசாயிகள் ஒரு வருடம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்க ளின் நிலை மேலும் மோசமாக உள்ளது. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று துன்புறுத்தி னர். ஆனால் அது குறித்து எல்லாம் வாய் திறக் காத மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பாதுகாப்பான ஆட்சியை தருவதாக பேசி வருகிறார்.

 பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. ஆனாலும் கடந்த காலங் களில் வெற்றி பெற்ற  அதிமுக, திண்டுக்கல் தொ குதியில் நேரடியாக போட்டியிட முடியவில்லை யே ஏன்? அதிமுக தலைவர்கள் தங்கள் ஆட்சியில் செய்த திட்டங்களை பற்றி பேசி வாக்குச் சேகரிக்க இயலவில்லை. அதனால் தான் எஸ்டிபிஐ கட்சியின் பின்னே ஒளிந்து கொண்டு அதிமுகவினர் வருகிறார்கள். அதிமுக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கவில்லை.

மாறாக, அந்த சட்டத்தை கொண்டு  வர என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்கள் அதிமுக தலைவர்கள். பழங்குடி இன பெண்மணியான திரௌ பதி முர்முவை குடியரசு தலைவராக ஆக்கி விட்டதாக பாஜகவினர் வானத்திற்கும் பூமிக் கும் குதித்தார்கள். ஆனால், குடியரசு தலை வரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பிற்கு அழைக்காமல் அவமானப்படுத்தினர். அத் வானிக்கு நேரில் சென்று பத்மஸ்ரீ விருது கொடுத்த போது மோடி மட்டும் அமர்ந்து கொண்டு முர்முவை நிற்கவைத்து இழிவுபடுத்தினர்.

பாஜக ஆட்சியில் பெண்களும், தலித் பழங்குடி மக்களும், சிறுபான்மையினரும் மிக மோச மான முறையில் ஒடுக்கப்படுகிறார்கள்.  பாஜக, அதிமுக போன்ற ஏமாற்றுப் பேர் வழிகள் நமக்கு வேண்டாம், நமக்கு, நமது வாழ்க்கை சூழலை எளிமையாக்கி பொருளா தார பிரச்சனைகளை, சரி செய்யும் வாக்குறு திகளை கொடுத்துள்ள ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி தான் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்க வேண்டும். அதற்காக திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட் சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

 திமுக நகரச் செயலாளர் வேலுமணி, பழனி நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி, சிபிஎம் வ.ராஜமாணிக்கம், நகர்மன்ற துணைத்தலை வர் கே.கந்தசாமி, பாலசமுத்திரம் பேரூராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, சோ.காளிமுத்து, நெய்க்காரப்பட்டி பேரூராட்சி அபுதாகிர், பேரூ ராட்சி தலைவர் கருப்பாத்தாள், துணைத் தலைவர் சகுந்தலா மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதிகளில் திரைக்கலைஞர் ரோகிணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.